Medicinial flowers

மல்லிகைப்பூ

மல்லிகைப்பூவில் பல வகைகள் உண்டு.மருத்துவத்திற்கு ஜாதி மல்லிகையே சிறந்தது.இது கொடி இனத்தைச் சேர்ந்தது. ஆவணியிலிருந்து கார்த்திகை வரை இப்பூக்களை அதிகம் காணலாம்.



·         தாய்ப்பால் சுரப்பு நீங்க_மல்லிகைபூவை கைப்பிடியளவு எடுத்து அரைத்து பால் ஊறும் மார்புப்பகுதியில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரப்பு நீங்கும்.3நாட்கள் கட்டலாம்.


·         ஒட்டுவாரொட்டி புண் நீங்க_ஒட்டிய புண்ணை ஒடுக்க மல்லிகைப்பூ என்பது பழமொழி.ஒட்டுவாரொட்டி புண் மீது மல்லிகைப்பூவை அரைத்து பூசினால் புண் அகன்று விடும்.


·         எண்ணெய் வடிந்த முகம்,முகப்பரு உள்ளவர்கள்-மல்லிகைப்பூவை அரைத்து முகத்தில் பூசிய பின் கடலை மாவைக்கொண்டு முகம் கழுவினால் அவர்களின் குறை நீங்கி விடும்.


·         வீக்கம் நீங்க_வீக்கம் உள்ள இடத்தில் மல்லிகை பூவை அரைத்து பற்று போடவும்.


·         வாய்ப்புண் தீர_மல்லிகைப்பூவை வாயிலிட்டு மென்று துப்பவும்.


·         தலைவலியா?_மல்லிகைப்பூவின் மணத்தை முகரலாம் அல்லது  தலையணைக்கடியில் மல்லிகை மலரைத்தூவி படுத்தாலும் தலைவலி நின்று விடும்.


·         விரை வீக்கத்துக்கு-மல்லிகைப்பூவை தேங்காய்ப்பூ சேர்த்து லேசாக வதக்கி விரை வீக்கத்தின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிடைக்கும்.


·         மண்டைக்குடைச்சல்,ஒற்றைத்தலைவலிக்கு_பவழ மல்லிகைப்பூவுடன் 7,8 மிளகைச் சேர்த்து அம்மியில் விழுதுப்போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பதன் மூலம் இப்பிரச்சினைகள் நீங்கப் பெறும்.

02.தூதுவளைப்பூ

·         உடல் வலுவடைய_தூதுவளைப்பூக்களை நெய்விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட ருசியாக இருக்கும்.உடலும் வலுவடையும்.

·         இளமை காக்க_தூதுவளைப்பூக்கள் தினம் இரண்டு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்புத் தோற்றம் பெற்று இளமைத் திரும்பும்.

·         முக அழகு வேண்டுமா?_தூதுவளைப்பூக்கள் 15 எடுத்து 200மி.லீ நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.

·         நரம்புகள் இறுக_தூதுவளைப்பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்துக.ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒரு வேளை மட்டும் அருந்தவும்.இதனால் நரம்புகள் இறுகும்.உடல் உறுதி பெறும். ஆண்மை கிடைக்கும்.


 

03.ரோஜாப்பூ

·         வெள்ளைப்படுதல்_ரோஜா இதழ்களைப் பச்சையாக காலை மாலை ஒரு கைப்பிடியளவு சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நிற்கும்.

·         சீதபேதி,மூலச்சூடு,வயிற்றுக்கடுப்பு_முன்பு ரோஜா இதழ்களை கைப்பிடியளவு காலை மாலை சாப்பிடவும்.

·         மூக்கடைப்பு_ரோஜா மலரை முகர்ந்து வந்தாலே மூக்கடைப்பு குணமாகிவிடும்.

·         தலைவலி_ரோஜாப்பூ இதழ்களைக் கசக்கி அல்லது நசுக்கி சாறு எடுத்து மூக்கில் பிழிந்தால் தலைவலி நீங்கி விடும்.

·         வயிறு சுத்தமாக_ரோஜா இதழ்களை மென்று விழுங்கவும்.













No comments:

Post a Comment