Medicinial flowers
·
தாய்ப்பால் சுரப்பு நீங்க_மல்லிகைபூவை
கைப்பிடியளவு எடுத்து அரைத்து பால் ஊறும் மார்புப்பகுதியில் வைத்துக் கட்ட தாய்ப்பால்
சுரப்பு நீங்கும்.3நாட்கள் கட்டலாம்.
·
ஒட்டுவாரொட்டி புண் நீங்க_ஒட்டிய
புண்ணை ஒடுக்க மல்லிகைப்பூ என்பது பழமொழி.ஒட்டுவாரொட்டி புண் மீது மல்லிகைப்பூவை அரைத்து
பூசினால் புண் அகன்று விடும்.
·
எண்ணெய் வடிந்த முகம்,முகப்பரு உள்ளவர்கள்-மல்லிகைப்பூவை
அரைத்து முகத்தில் பூசிய பின் கடலை மாவைக்கொண்டு முகம் கழுவினால் அவர்களின் குறை நீங்கி
விடும்.
·
வாய்ப்புண் தீர_மல்லிகைப்பூவை வாயிலிட்டு
மென்று துப்பவும்.
·
தலைவலியா?_மல்லிகைப்பூவின் மணத்தை முகரலாம்
அல்லது தலையணைக்கடியில் மல்லிகை மலரைத்தூவி
படுத்தாலும் தலைவலி நின்று விடும்.
·
விரை வீக்கத்துக்கு-மல்லிகைப்பூவை
தேங்காய்ப்பூ சேர்த்து லேசாக வதக்கி விரை வீக்கத்தின் மீது வைத்துக் கட்டினால் குணம்
கிடைக்கும்.
·
மண்டைக்குடைச்சல்,ஒற்றைத்தலைவலிக்கு_பவழ மல்லிகைப்பூவுடன்
7,8 மிளகைச் சேர்த்து அம்மியில் விழுதுப்போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பதன்
மூலம் இப்பிரச்சினைகள் நீங்கப் பெறும்.
Subscribe to:
Comments (Atom)



No comments:
Post a Comment